யாழ்ப்பாணம் சர்வதேச விமான (பலாலி) நிலையத்திற்கும் இந்தியா தமிழ்நாட்டின் திருச்சி விமான நிலையத்திற்கும் இடையிலான விமான சேவைகள் 47 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று 30.03.2025 முதல் ஆரம்பமாகியுள்ளது.
திருச்சியில் இருந்து மதியம் புறப்பட்ட இண்டிகோ ரக விமானம், யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை ஒரு மணி நேரத்தில் வந்தடைந்தது.
அதன்படி, திருச்சியிலிருந்து 27 பணிகளுடன் இன்று மதியம் 02.02 க்கு விமானமொன்று பலாலி விமான நிலையத்தை வந்தடைந்தது.
அதேநேரம், பலாலி விமான நிலையத்திலிருந்து மீண்டும் 36 பயணிகளுடன் குறித்த விமானம் மாலை 3 மணியளவில் திருச்சியை நோக்கிப் புறப்பட்டது. இதன்போது விமான நிலையத்தில் நீர் விசிறியும் (Water Salute), கேக் வெட்டியும் வரவேற்பளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் இந்திய துணைத்தூதரகர் சாய் முரளி உள்ளிட்ட துணைத்தூதரக அதிகாரிகள் விமான நிலைய அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
குறித்த விமான சேவையானது தினமும் 1.25 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு 2.25 மணியளவில் யாழ்ப்பாணத்தை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது
யாழ்ப்பாணத்தில் இருந்து மாலை 3.15 மணிக்கு புறப்பட்டு, திருச்சியை மாலை 4 மணியளவில் சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை யாழ்ப்பாணத்தில் இருந்து சிங்கப்பூர் பயணிக்க விரும்புவோர், திருச்சி சென்று, திருச்சி ஊடாக சிங்கப்பூர் பயணிக்கக்கூடிய விதத்தில் விமான சேவை திட்டமிடப்பட்டுள்ளது.
0 Comments